ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்
ஏர் இந்தியா விமான விபத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய ஜோதிடர் ஒருவர் பேரழிவு தரும் ஒரு விமான விபத்து பற்றி எச்சரித்துள்ளார்.
அழிவு ஏற்படும்
சமூக ஊடகங்களில் ஆஸ்ட்ரோ ஷர்மிஸ்தா என்ற பெயரில் அழைக்கப்படும் ஜோதிடர், 2025 ஆம் ஆண்டில் 'விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும்' என்று கடந்த ஆண்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி, கடந்த வாரம் அவர் தனது கணிப்பை மீண்டும் உறுதி செய்திருந்தார். 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்து அழிவு ஏற்படும் என்ற கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கூறுகிறேன் என அதில் அவர் பதிவு செய்திருந்தார்.
ஜூன் 5ம் திகதி வெளியான அவரின் இந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பல சமூக ஊடகப் பயனர்கள் அவரை தற்போது வியப்புடன் ஆதரித்து வருகின்றனர்.
உயிர் தப்பவில்லை
இதனிடையே, 53 பிரித்தானியர்களுடன் புறப்பட்ட அந்த விமானத்தில் ஒருவர் தவிர எவரும் உயிர் தப்பவில்லை என்றே உள்ளூர் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.
மேலும், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதால் உள்ளூர் மக்கள் பலரும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |