பிரித்தானியா உட்பட 44 நாடுகளை உலுக்கும் இந்திய கொரோனா மாறுபாடு! உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்
முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
B.1.617 என்ற கொரோனா மாறுபாடு கடந்த அக்டோபர் மாதம் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் உள்ள 44 நாடுகளிலிருந்து அனைவரும் அணுகக்கூடிய தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 4,500-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக ஐ.நா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக ஐந்து நாடுகளிலும் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்புக்கு அறிக்கை கிடைத்துள்ளதாம்.
இந்தியாவுக்கு வெளியே, பிரித்தானியாவில் தான் B.1.617 மாறுபாட்டால் அதிகபடியானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரம் ஆரம்பத்தில் B.1.617 மாறுபாட்டை மிகவும் கவலைக்குரிய மாறுபாடு என பிரித்தானியா அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.