தலையில் பலமாக தாக்கிய பந்து! காயமடைந்த முக்கிய வீரர்... இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மாய்ங்க் அகர்வாலுக்கு வலைப்பயிற்சியின்போது தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் திகதி முதல் போட்டி தொடங்க உள்ளது.
அதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலின் ஹெல்மெட்டில் பந்து பலமாக அடித்தது.
இதன்காரணமாக அவரது தலையில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மயங்க் அகர்வால் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியின் சுப்மன் கில் விலகியுள்ள நிலையில், மயங்க் அகர்வாலும் காயத்தால் விலகியது இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
While he has shown signs of #concussion, #MayankAgarwal is currently stable and will remain under close medical observation. #IndvsEng pic.twitter.com/0KvKmHhb7p
— editorji (@editorji) August 2, 2021