சுதந்திரமான அதிகாரத்தை வழங்குகிறார்..!ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய இளம் இந்திய வீரர்
களத்தில் வீரர்கள் சுதந்திரமாக தாங்கள் நினைக்கும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை கேப்டன் ரோஹித் சர்மா வழங்கினார் என இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
அதிரடி காட்டும் இளம் இந்திய வீரர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
சமீபத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தூரில் நடைபெற்று முடிந்தது, இந்த போட்டியில் இளம் வீரர்களான சுப்மன் கில் 104 ஓட்டங்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களும் குவித்து இருவருமே அதிரடி சதத்தை பூர்த்தி செய்தனர்.
அத்துடன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் அசால்டாக விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பிரித்தானியாவில் நெஞ்சுவலியால் சரிந்த ஆம்புலன்ஸ் சாரதி: நோயாளி மற்றும் செவிலியர் செய்த நெகிழ்ச்சி செயல்
ரோகித் சர்மாவை புகழ்ந்த சுப்மன் கில்
இந்நிலையில் களத்தில் வீரர்கள் சுதந்திரமாக தாங்கள் நினைக்கும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை கேப்டன் ரோஹித் சர்மா வழங்கினார் என இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
IANS
ஆட்டத்தின் நுணுக்கங்களை கணிக்க களத்தில் நிற்கும் வீரர்களை விட பொருத்தமானவர்கள் வேறு யாரும் இல்லை என்பதே அவரின் நம்பிக்கை, இதையே பயிற்சியாளர்களிடமும் அவர் தொடர்ந்து அறிவுறுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |