உக்ரைனில் போருக்கு மத்தியில் சிறுத்தை, ஜாகுவாரை வளர்த்த இந்தியர்! பணம் தீர்ந்ததால் செல்லப்பிராணிகளை பிரிந்து தவிக்கும் சோகம்

Russo-Ukrainian War Ukraine Poland Indian Origin
By Ragavan Oct 02, 2022 08:06 PM GMT
Report

செல்லப்பிராணிகள் உணவு செலவுக்காக அவர் தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து, நிலம், வீடு, கார்கள், பைக் மற்றும் கமெரா எல்லாவற்றையும் விற்றார்.

இந்தியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் அல்லது காட்டில் அவற்றை கொண்டு விட இந்திய அரசாங்கத்தின் உதவியை அவர் நாடியுள்ளார்.

உக்ரைனில் சிறுத்தை மற்றும் ஜாகுவாரை பாசமாக வளர்ந்து வந்த இந்திய மருத்துவர், பல மாதப் போராட்டத்திற்குப் பிறகு, பணம் தீர்ந்ததால் தனது செல்லப்பிராணிகளை அங்கேயே விட்டுச்ச் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் சோகத்தில் உள்ளார்.

இந்தியாவில் பிறந்த மருத்துவர் ஒருவர், தனது இரண்டு செல்லப்பிராணிகளான ஜாகுவார் மற்றும் சிறுத்தையுடன் பல மாதங்களாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவித்துள்ளார்.

உக்ரைனில் போருக்கு மத்தியில் சிறுத்தை, ஜாகுவாரை வளர்த்த இந்தியர்! பணம் தீர்ந்ததால் செல்லப்பிராணிகளை பிரிந்து தவிக்கும் சோகம் | Indian Doctor Struggle Ukraine Pets Jaguar Leopard

2016-ஆம் ஆண்டில் உக்ரைன் குடியுரிமை பெற்ற 42 வயதான மருத்துவர் கிடிகுமார் பாட்டீல் (Gidikumar Patil), ரஷ்யா-உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டுவீசித் தாக்கப்பட்டதை அடுத்து, தனது செல்லப்பிராணிகளை விட்டுவிட்டு அண்டை நாடான போலந்திற்கு சென்று வாழ வேண்டியிருந்தது.

பாட்டீல் 2020-ஆம் ஆண்டில் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு விலங்குகளை வாங்கினார். அவற்றில் ஒன்று 24 மாத ஆண் 'லெப்ஜாக்' (lepjag) அதாவது, ஆண் சிறுத்தை (Leopard) மற்றும் பெண் ஜாகுவார் (jaguar) ஆகியவற்றின் அரிய கலப்பின மிருகத்தையும், மற்றொன்று 14 மாத பெண் கருப்பு பாந்தர் (black panther) ஆகும்.

உக்ரைனில் போருக்கு மத்தியில் சிறுத்தை, ஜாகுவாரை வளர்த்த இந்தியர்! பணம் தீர்ந்ததால் செல்லப்பிராணிகளை பிரிந்து தவிக்கும் சோகம் | Indian Doctor Struggle Ukraine Pets Jaguar Leopard

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபோது, பாட்டீல் தனது செல்லப்பிராணிகளை விட்டு வெளியேற மாட்டேன் என்று சபதம் செய்தார். கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்கில் உள்ள ஒரு சிறிய நகரமான ஸ்வாவ்டோவில் உள்ள மருத்துவமனையில் அவர் எலும்பியல் மருத்துவராக பணிபுரிந்தார்.

ஆனால் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டுவெடிப்புக்கு முன் மூடப்பட்டதால், தனது செல்லப் பூனைகளுக்கு உணவளிப்பது மிகவும் கடினமானது. அவர் உணவுக்காக 300 டொலர் செலவழித்து வந்தார், அதில் போர் தொடங்கிய பிறகு தினமும் 5 கிலோ கோழி இறைச்சி இருந்தது.

இறுதியில், அவர் தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து, தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை, இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு கார்கள், அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கமெரா ஆகியவற்றை $100,000-க்கு விற்றார்.

உக்ரைனில் போருக்கு மத்தியில் சிறுத்தை, ஜாகுவாரை வளர்த்த இந்தியர்! பணம் தீர்ந்ததால் செல்லப்பிராணிகளை பிரிந்து தவிக்கும் சோகம் | Indian Doctor Struggle Ukraine Pets Jaguar Leopard

பாட்டீல் உக்ரைனில் உள்ள ஒரு பையில் தனது ஆடைகள், $100 மற்றும் சில ஆயிரம் ரூபிள் ரொக்கத்துடன் வெளியேறினார். அவர் பூனைகளை ஒரு பராமரிப்பாளரிடம் விட்டுவிட்டு, அவருக்கு மூன்று மாத ஊதியமாக $2,400 கொடுத்தார் மற்றும் ஒரு நாள் கொஞ்சம் பணம் சம்பாதித்து திரும்புவார் என்ற நம்பிக்கையில் எல்லையை கடக்க முடிவு செய்தார்.

ஆனால் அவர் நினைத்தது போல் திட்டம் நிறைவேறவில்லை. எல்லையை கடக்க முயன்றபோது, ​​உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ரஷ்ய வீரர்களால் தடுத்து வைக்கப்பட்டு மூன்று நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவர் போரில் பங்கேற்கவில்லை என்று அவர்களை நம்பவைத்த பிறகுதான், அவர் தனது விலங்குகளை வைத்து யூடியூப் வீடியோக்களைக் காட்டினார். ஆனால் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றி காகித அடையாளத்தை வழங்கி அவரை போலந்து எல்லைக்கு அருகில் இறக்கிவிட்டனர்.

உக்ரைனில் போருக்கு மத்தியில் சிறுத்தை, ஜாகுவாரை வளர்த்த இந்தியர்! பணம் தீர்ந்ததால் செல்லப்பிராணிகளை பிரிந்து தவிக்கும் சோகம் | Indian Doctor Struggle Ukraine Pets Jaguar Leopardஉக்ரைனில் கிடிகுமார் பாட்டீல் தங்கியிருந்த Severodonetsk நகரம்- GettyImages

பாட்டீல் தனது சோதனையை போலந்து அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட பிறகு, அவர்கள் அவருக்கு "paper visa" அளித்தனர், இது அவரை 90 நாட்கள் நாட்டில் தங்க அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். பின்னர் அவர் வார்சாவுக்கு இரவு பேருந்தில் சென்றார்.

உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், பாட்டீல் எப்போது தனது செல்லப்பிராணிகளை பார்க்க உக்ரைன் திரும்புவார் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் அவருக்கு பணம் அனுப்பினாலும், அவர் தனது பூனைகளை மீட்டெடுக்க இந்திய தூதரகங்களின் கதவுகளைத் தட்டியுள்ளார்.

"எனது பூனைகளை உக்ரைனில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியுமா என்று நான் கியேவில் உள்ள இந்திய தூதரகத்தை தொலைபேசியிலும் வாட்ஸ்அப்பிலும் சில முறை தொடர்பு கொண்டேன். அவர்கள் காட்டு விலங்குகளை கையாள்வதில் என்று என்னிடம் சொன்னார்கள்," என்று அவர் கூறினார்.

மேலும், "எனக்கு என் பூனைகள் திரும்ப வேண்டும். இந்திய அரசாங்கம் அவர்களை அழைத்து வந்து இந்தியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் அல்லது காட்டில் கொண்டு விட்டாலே போதும். நான் அவற்றை காப்பாற்ற விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US