லொட்டரியில் கோடீஸ்வரரான இந்திய எலக்ட்ரீஷியன்.., அவர் வென்ற தொகை எவ்வளவு?
ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் லொட்டரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர் ஒரேநாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
ஆந்திர நபர்
இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேந்தவர் நாகேந்திரம் போருகடா (46). இவர் கடந்த 2017 -ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். அங்கு எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 8 வயதில் மகளும் 16 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2019 -ம் ஆண்டு முதல் உள்ளூர் நிதி நிறுவனமான நேஷனல் பாண்ட்ஸ் மூலம் direct debit மூலம் மாதம் தோறும் 100 எமிரேட்ஸ் திர்ஹம்களை சேமித்து வந்துள்ளார்.
இதனால், 1 மில்லியன் எமிரேட்ஸ் திர்ஹம்களை வென்றுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.2.23 கோடி ஆகும்.
இதுகுறித்து பேசிய நாகேந்திரம், "தனது குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்றும் தான் ஜக்கிய எமிரேட்ஸிற்கு வந்தேன்" என்றார்.
மேலும், "தற்போது இந்த மாதிரியான பெரிய ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை மிக யதார்த்தமாக உணருகிறேன்" என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |