லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல்
லண்டனின் எலிபண்ட் அண்ட் காஸில் பகுதியில் உள்ள 45-மாடி உயரமான ஹைபாயிண்ட் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த துயர சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிதி விஜய் பரல்கர் (46), அவரது கணவர் ரகேஷ் நாராயண் பாய் (47) மற்றும் அவர்களின் 9 வயது மகன் சித் பாய் பரல்கர் ஆகியோர் 36வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

மே 27 காலை 7.30 மணியளவில், மூவர் கீழே விழுந்ததாக அவசர சேவைகள் தகவல் பெற்றன. உடனடியாக லண்டன் பொலிஸ், ஆம்புலன்ஸ், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மெட்ரோபாலிடன் பொலிஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், இது murder-suicide என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களின் மகன் சித், பிறந்தது முதல் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். பேச முடியாத நிலை, கற்றல் சிரமம், உடல் குறைபாடுகள் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றால் குடும்பம் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிதி, மன அழுத்தம் மற்றும் மனநல சவால்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பொலிஸ் தரப்பில், “இது மிகுந்த துயரமான சம்பவம். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. ஊகங்கள் மற்றும் வதந்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |