கனடாவின் சர்ரே பூங்காவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: இந்திய வம்சாவளி நபர் கைது
Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி நபர் கைது
கனடாவின் சர்ரே நகரில் அமைந்துள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜகந்தர் குரானா(Jagendar Kurana) என்று அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர், சர்ரேவில் உள்ள பியர் கிரீக் பூங்காவில்(Bear Creek Park) இளம்பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆகஸ்ட் 9ம் திகதி இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு உடல் காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைது நடவடிக்கை
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஆகஸ்ட் 12ம் திகதி ஜகந்தர் குரானா-வை கைது செய்தனர்.
சந்தேக நபர் மீது போடப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு தொடரகம் அனுமதியளித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜகந்தர் குரானா தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |