இங்கிலாந்து தேவாலயத்தில் மிக இளவயதில் Bishop ஆன இந்தியர்! யார் இவர்?
இங்கிலாந்து தேவாலயத்தில் மிக இளவயதில் Bishop ஆன பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் இந்தியாவில் பிறந்த Reverand Malayil Lukose Varghese Muthalaly(Saju).
42 வயதான Saju, செவ்வாயன்று St Paul's Cathedralல் நடந்த Eucharist serviceன் போது, இந்திய Rosewood மரத்தால் செய்யப்பட்ட பொருளுடன் ஊழியர்கள் முன்னிலையில் அவர் பிஷப் ஆக பொறுப்பேற்றுக் கொண்டதோடு புனிதப்படுத்தவும்பட்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் Saju பிஷப்பாக பொறுப்பேற்பதற்கு இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிந்துரை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து Saju இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வைப் பற்றி Saju கூறும்போது, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரிதும் தெரிந்த பிரபலமான சர்ச்சில் நான் பிஷப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களுக்காக நான் ஜெபிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நான் அறிவேன்.
இந்த ஆத்மார்த்தமான சேவைக்கு என்னை நான் தயார் செய்து வருகிறேன். பரந்துப்பட்ட இந்த தேவாலயத்தில் நான் இணைவது ஒரு வலுவான உணர்வை எனக்கு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் Saju வின் நான்கு குழந்தைகளில் Zipp மற்றும் Abraham என இருவர் கலந்துகொண்டு தனது தந்தையோடு சேர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
Saju தனது குழந்தைப் பருவத்தைப் கேரளா மற்றும் பெங்களூரில் கழித்துள்ளார் மற்றும் அவர் பெங்களூரில் உள்ள தொழுநோய் மருத்துவமனையில் அதாவது தன்னுடைய தாய் பணியாற்றிய மருத்துவமனையில் வளர்ந்துள்ளார்.
தனது கல்லுரி படிப்பை பெங்களூருவில் உள்ள தெற்கு ஆசிய Bible College இல் முடித்திருக்கிறார். இவை தவிர Oxford இல் உள்ள Wycliffe Hall இல் ஊழியத்திற்காக பயிற்சியும் பெற்றுள்ளார்.