சிங்கப்பூரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த இந்தியர்: விதிக்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை
சிங்கப்பூரில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த இந்தியாவை சேர்ந்த சின்னையா என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த சின்னையா(26) என்ற நபர், பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதில், சாலையில் தனியாக நடந்து சென்ற கல்லூரி பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சின்னையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
IANS
16 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தல் செய்த சின்னையாவுக்கு 12 கசையடிகள் மற்றும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |