ராஜினாமா செய்யும் பிரித்தானிய பிரதமர்... இந்திய ஊடகங்கள் கூறுவதென்ன?
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்கள் கூறுவதென்ன?
இந்நிலையில், ஸ்டார்மருடனான இந்தியாவின் உறவு குறித்த சில விடயங்களை இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

லேபர் கட்சியின் தலைவராக ஜெரமி கார்பின் இருந்த காலத்தில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது லேபர் கட்சி.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கார்பின் லேபர் கட்சியின் தலைமையிலிருந்து விலக, கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் கெய்ர் ஸ்டார்மர்.
அவரது கொள்கைகளும் அணுகுமுறையும், முந்தைய லேபர் கட்சி தலைவர்களைவிட வித்தியாசமாக இருந்தன.
பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான வீடுகள் தட்டுப்பாடு, அரசு மருத்துவமனையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்கள் மீது அவர் கவனம் செலுத்த, அடுத்து வந்த தேர்தலில், அதாவது, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது லேபர் கட்சி.
ஆனால், சில தலைகீழ் கொள்கை மாற்றங்கள், தவறான முடிவுகள், இன்று அவரது பதவிக்கு உலைவைத்துவிட்டன.
விடயம் என்னவென்றால், சமீபத்தில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சந்தித்துப் பேசிக்கொண்ட ஸ்டார்மரும் இந்திய பிரதமரான மோடியும், பிரித்தானியா இந்தியாவுக்கிடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிக்கொண்டார்கள்.

அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 15ஆம் திகதி அந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமுலுக்கு வர உள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார்.
அடுத்த பிரதமர் அதைக் குறித்து என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை!
இன்னொரு விடயம் என்னவென்றால், லேபர் கட்சியின் முந்தைய தலைவரான ஜெரமி கார்பின், சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இந்திய எதிர்ப்புக் கொள்கைகள் கொண்டிருந்தார்.
ஆனால், ஸ்டார்மர் தனது தேர்தல் அறிக்கையிலேயே தான் இந்தியாவுடன் மூலோபாய கூட்டாண்மையையையும் நல்லுறவையும் நாட இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், பிரித்தானியாவில் இந்து வெறுப்புக்கு இடமில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார் அவர். அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தனது ஆட்சிக் காலத்திலும் அதையே வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அடுத்து பிரதமர் பதவிக்கு வருபவர் என எதிர்பார்க்கப்படும் நபர், தன் சொந்தக் கட்சியிலேயே ஆட்களை சேர்த்துக்கொண்டு, ஸ்டார்மரை வெளியேற்றுவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்மரை பதவியிலிருந்து இறகிவிட்டு தானே பிரித்தானியாவின் பிரதமர் இருக்கையில் அமரத் துடித்துக்கொண்டிருப்பவர் அவர். ஆக, அடுத்து என்ன நடக்கும், இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு இதேபோல நீடிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |