நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு போராடிய இலங்கை மீனவர்
சர்வதேச எல்லையில் மீன் பிடிக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிருக்கு போராடிய இலங்கை மீனவர் இந்திய கடற்படையால் காப்பாற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை மீனவர் ஒருவருக்கு சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக ஹெலிகாப்டருடன் விரைந்த இந்திய கடற்படையினர், நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை மீட்டுள்ளனர்.
பின்னர் அவர் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் காப்பாற்றப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.
நடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவரை மீட்ட இந்திய கடற்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |