கடற்கொள்ளையர்களிடமிருந்து மால்டா கப்பலைக் காப்பாற்றும் இந்தியக் கடற்படை; பிரித்தானியா எச்சரிக்கை
அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து மால்டா நாட்டு கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.
கடற்கொள்ளையர்கள் குறித்து டிசம்பர் 14 அன்று இந்திய கடற்படைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்னர், கடத்தப்பட்ட MV Rouen கப்பலுக்கு உதவ இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களில் ஒன்றை ஏடன் வளைகுடாவிற்கு அனுப்பியது.

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
கடத்தப்பட்ட கப்பல் கொரியாவிலிருந்து துருக்கி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கப்பலை கடைசியாக தொடர்பு கொண்டபோது, அரபிக்கடலில் உள்ள சொகோத்ரா தீவில் இருந்து ஏமன் நோக்கி 380 கடல் மைல் தொலைவில் இருந்தது.
அடையாளம் தெரியாத 6 பேர் தங்கள் கப்பலுக்கு வந்ததாக UKMTO போர்ட்டலில் கடற்படைக்கு தகவல் வந்துள்ளது. இதற்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் எம்வி ரூயனைக் கண்டுபிடிப்பதற்காக இந்திய கடற்படை அதன் விமானம் ஒன்றை கண்காணிப்பதற்காக அனுப்பியது. அப்போது, கடத்தப்பட்ட கப்பலில் 18 பேர் இருந்துள்ளனர்.
Fleetmon
இந்நிலையில், இன்று இந்திய கடற்படை விமானங்கள் முழுப் பகுதியிலும் வான்வழி ஆய்வு நடத்தி நிலைமையை ஆய்வு செய்துள்ளன. கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட கப்பலை Somalia நோக்கி கொண்டுசெல்கின்றனர் என இந்திய கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கப்பலைக் காப்பாற்ற தங்கள் கடற்படையை அனுப்பியுள்ளன.
2017-க்குப் பிறகு பாரிய கடத்தல்
2017-க்குப் பிறகு, அரபிக்கடலில் கப்பல் கடத்தப்பட்ட மிகப்பாரிய சம்பவம் இதுவாகும். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கென்யா அதிபரிடம் கடல் பாதுகாப்பு பிரச்னையை எழுப்பினார். மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் அவ்வப்போது அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரித்தானியா எச்சரிக்கை
தற்போது இந்த பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பிரித்தானியாவின் Royal Marines எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளுமாறு கப்பலின் ஆபரேட்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Malta Vessel Hijacked In Arabian Sea, Indian Navy Warship, United Kingdom Royal Marines, malta vessel hijack