போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள்
போர் தொடர்பான விடயங்களை துக்கியமாக கணிப்பவரான இந்திய ஜோதிடக்கலைஞர் ஒருவர், அமெரிக்கா குறித்த சில விடயங்களை கணித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ், வட - தென் கொரியா, சீனா - தைவான் மற்றும் ரஷ்யா - நேட்டோவுக்கிடையில் பதற்றம் ஏற்படும் என அவர் கணித்திருந்த அனைத்தும் பலித்துள்ளதால் அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
இந்திய நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைப்படும் அவரது பெயர், குஷால் குமார்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒன்றையொன்று எதிர்க்கும் நாடுகளின் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் கொண்ட புதுமையான போர் உத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப உயர்தர ஆயுதங்கள் அமெரிக்காவால் உருவாக்கப்படலாம் அல்லது வெளிக்கொணரப்படலாம்.
இத்தகைய ஆயுதங்கள் வான் பாதுகாப்பு அல்லது விண்வெளி பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆகத்து மாதம் கணித்துக் கூறியிருந்த குமார், பெரிய நிதி முதலீடு அல்லது செலவு நடக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்த மாதமும் அடுத்த மாதமும் அமெரிக்கா கூட்டாளிகளை உருவாக்கும் என்று குமார் கூறியிருந்தார், அவர் கூறியதுபோலவே ஈரானை ஆளும் ஆட்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில் அமெரிக்காவும் இணைந்துகொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில், அமெரிக்கா ஒரு போரை எதிகொள்ளும் என்றும், ஆனால் அது நிலத்தில் நடக்காது என்றும் குமார் கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் 10 ஆம் தேதி, அமெரிக்காவுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த நாட்டிற்கு எதிராக டிரம்ப் கடலில் ஒரு போரை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார் குமார்.
கடல் அல்லது விண்வெளியில் மிகப்பெரிய வணிக மதிப்பைக் கொண்ட சில சொத்துக்கள் அறியப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம் அல்லது அடையாளம் காணப்படலாம்.
ஏதேனும் சக்திவாய்ந்த நாடு மூலோபாய வலிமையைக் காட்டினால், அமெரிக்கா அதைத் தடுக்கவும், முறியடிக்கவும் முடியும் என்றும் கூறியுள்ளார் குமார்.
இந்தப் போரில் அமெரிக்காவை யார் குறிவைப்பார்கள் என்று குமார் குறிப்பிடவில்லை, ஆனால், அது ரஷ்யா அல்லது சீனா போன்ற ஏதாவது ஒரு நாடாக இருக்கலாம் என கருதலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |