இன்னும் சில நாட்கள்தான்: இந்திய ஜோதிடர் கூறும் பதறவைக்கும் செய்தி
இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த செய்தி ஏற்கனவே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்திய நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Image: Getty Images
காரணம், அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அவர் அதை கணித்துள்ளார். அது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பயன்படுத்தி, கர்மாவின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு விடயமாக கருதப்படுகிறது.
மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஜோதிடர்
இப்போது, குமார் மீண்டும்தனது கூற்றை உறுதி செய்யும் வகையில், 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை காணப்படுகிறது.
Image: LinkedIn/Canva
இருப்பினும் ஜூன் மாதம் 10ஆம் திகதியும் 29ஆம் திகதியும் கூட குறிப்பிடத்தக்க நாட்கள்தான் என்று கூறியுள்ளார்.
வடகொரியா கழிவுகளை அனுப்பியதும் முக்கியமான நிகழ்வே
Image: Getty Images/Science Photo Library RF
மேலும், பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், வடகொரிய வீரர்கள் எல்லைக்கோட்டைத் தாண்டி தென் கொரியாவிற்குள் நுழைந்தது, கழிவுகளை பலூன்களில் கட்டி அனுப்பியது, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான மோதல் அதிகரிப்பு என, இவை அனைத்தும் தனது கணிப்பு உண்மையானது என்பதையே சுட்டிக்காட்டுவதாகவும் குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |