அமெரிக்காவில் கடத்தப்பட்ட 4 பேர் கொண்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு! பதைபதைக்கும் புகைப்படம்
அமெரிக்காவில் கடத்தப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்.
கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு.
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரான இந்திய வம்சாவளியினர் கடத்தப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), மனைவி ஜஸ்லீன் கவுர் (27), இவர்களது 8 மாத குழந்தையுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ஜஸ்தீப் சிங் அவரது மனைவி, 8 மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் (39) ஆகியோருடன் மெர்சிட் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றிருந்தார்.
உற்சாகமாக சுற்றி பார்த்து கொண்டிருந்த அவர்களை திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
ANI
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட நால்வரும் கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என சிஎன்என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையில் நால்வரும் ஆயுதம் ஏந்திய ஒருவரால் டிரக்கிற்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டதை கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABC news