6 மாதம்.. கொரோனாவுடன் போராடிய இந்தியரின் தற்போதைய நிலை என்ன? அதிசய நிகழ்வு
அபுதாபியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர் 6 மாதத்திற்கு பிறகு உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அருண்குமார்(32) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் உயிர் காக்கும் கருவி கொண்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
சுமார் 6 மாதம் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்த அருண்குமார் தற்போது கொடிய வைரஸான கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு பரிபூரணமாக குணமாகியுள்ளார்.
அவரது மனதைரியம் மற்றும் விடாமுயற்சி தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இவரது மனதைரியத்தை பாராட்டி பிரபல நிறுவனம் ஒன்று அவருக்கு 50 லட்சம் தொகையும் அவரின் மனைவிக்கு வேலையும் வழங்கியுள்ளது.