இந்திய வம்சாவளி ஆசிரியைக்கு பிரித்தானியாவில் கற்பிக்க தடை- வெளிவந்த மோசடி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரிட்டிஷ் கல்வித் துறை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கற்பிக்க தடை விதித்துள்ளது.
அவரது பெயர் தீப்தி படேல். 2018-ல் மோஸ் சைடில் உள்ள மான்செஸ்டர் அகாடமியில் உடற்கல்வித் தலைவராக தீப்தி படேல் லண்டனில் இருந்து போல்டனுக்கு மாறினார்.
நாடக திருட்டு
அதற்கு முன்பாக, தீப்தி படேல் தனது வீட்டில் ஆயுதமேந்திய திருட்டு நடந்ததாகவும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் குடும்பம் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளுக்கு இன்சூரன்ஸ் க்ளெய்ம் செய்ததாகவும் கூறினார்.
ஆனால் விசாரணையில் அவரது வீட்டில் உண்மையாக திருட்டு நடக்கவில்லை என்றும், இது அவரது குடும்பத்தினரின் இன்சூரன்ஸ் க்ளெய்ம் மோசடி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
பொய் சொன்னார்
இதற்காக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டபோது, பள்ளியிடம் விஷயத்தை மறைத்துள்ளார். செயின்ட் அல்பன்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டியிருந்தபோது, குழந்தையை சந்திப்பதற்காக செல்வதாக கூறி, விடுப்பு விண்ணப்பத்திலும் அவர் பொய் சொன்னது தெரியவந்தது.
பின்னர் அவர் மான்செஸ்டர் அகாடமியால் கற்பித்தல் ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு (டிஆர்ஏ) பரிந்துரைக்கப்பட்டார். அங்கு ஆசிரியையாக இருந்தார்.
மோசடி குற்றங்களை மறைத்தது தெரியவந்து- தடை விதிக்கப்பட்டது
பட்டேலின் நடத்தையை ஆராய்ந்த ஒரு சுயாதீன குழு, பட்டேலின் நடத்தை தரத்திற்கு குறைவாகவே இருந்தது என்று கண்டறிந்தது. அப்போது அவர் பொய் சொன்னது, மோசடி குற்றங்களை மறைத்தது அனைத்து அம்பலமானது.
இதையடுத்து, மே 12 அன்று, குழு இரண்டு ஆண்டுகள் அவர் கற்பிக்க தடை விதிக்கலாம் என பரிந்துரைத்தது, அதை கல்வித்துறை ஏற்றுக்கொண்டது.
உத்தரவின்படி, பட்டேல் இங்கிலாந்தில் உள்ள எந்தப் பள்ளி, ஆறாம் வகுப்பு கல்லூரி, தொடர்புடைய இளைஞர் குடியிருப்பு அல்லது குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் கற்பிக்க முடியாது.
உயர் நீதிமன்றத்தின் கிங்ஸ் பெஞ்ச் பிரிவில் மேல்முறையீடு செய்ய படேலுக்கு உரிமை உண்டு என்று குழு கூறியது.