"ட்ரம்பிற்கு மரணம்"! பிரித்தானிய விமானத்தில் இந்திய வம்சாவளி நபர் வெடிகுண்டு மிரட்டல்..பயணிகள் பீதி
லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் இந்திய வம்சாவளி நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவுக்கு அழிவு என கூச்சல்
பிரித்தானியாவின் லண்டன் Luton விமான நிலையத்தில் இருந்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு Easyjet என்ற விமான புறப்பட்டது.
.@BBCNews .@SkyNews no coverage yet of bomb threat incident on an easyJet plane this morning? I have full video available showing passenger take down and the man’s id as taken by a friend on the plane pic.twitter.com/SOTrAaKLng
— Trevor Nicosia 🧢🖌101 (@nyssa7) July 27, 2025
விமானத்தில் இருந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவர் திடீரென எழுந்து "ட்ரம்பிற்கு மரணம்", "அமெரிக்காவுக்கு அழிவு", "வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் போகிறேன்" என கூச்சலிட்டார்.
மேலும் மத கோஷங்களையும் எழுப்பியுள்ளார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே விமான ஊழியர்களின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது.
கைது
இதற்கிடையில், பயணிகளில் இருவர் எழுந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். குழப்பம் காரணமாக கிளாஸ்கோவில் விமானிகள் அவசரமாக தரையிறக்கினர்.
அங்கு காத்திருந்த ஸ்கொட்டிஷ் காவல்துறை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்தனர்.
பிபிசியின் கூற்றுப்படி, குறித்த நபர் 41 வயதான அபய் நாயக் என்பதும், அவர் லண்டனுக்கு அருகில் உள்ள Bedfordshireயில் வசிப்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |