மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் இந்திய கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு: வெளிநாடு ஒன்றில் அரசியலில் பூகம்பம்
போர்ச்சுகலுக்குச் சென்றிருந்த இந்திய கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு திடீர் பிரசவ வலி.
மருத்துவமனையில் இடமில்லாததால் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
போர்ச்சுகல் நாட்டில், இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் பிரசவத்துக்காக மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றிருந்த நிலையில், அந்த மருத்துவமனையில் இடமில்லாததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
வேறொரு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தததால், போர்ச்சுகல் நாட்டின் அரசியலில் பூகம்பம் வெடித்துள்ளது.
போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த 34 வயதுடைய இந்தியப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததைத் தொடர்ந்து அவர் பிரபல மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
GETTY IMAGES
ஆனால், அந்த மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளை அனுமதிக்கும் பிரிவில் இடம் இல்லாததால், அவரை வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், போகும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார்.
ஏற்கனவே இதேபோல மருத்துவமனையில் இடமில்லாததால் கர்ப்பிணிகள் இருவர் வேறு மருத்துவமனைகளுக்கு அலைக்களிக்கப்பட்டதால் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த விடயத்தால், போர்ச்சுக்கல் சுகாதாரத்துறை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், இந்த இந்தியப் பெண்ணும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, போர்ச்சுகல் சுகாதாரத்துறை அமைச்சரான Dr Marta Temido ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே ஊழியர் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த இந்திய கர்ப்பிணிப்பெண்ணின் மரணம் சுகாதாரத்துறை அமைச்சரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ளதாக போர்சுகல் பிரதமரான António Costa தெரிவித்துள்ளார்.