அமெரிக்காவில் தாத்தா, பாட்டி, மாமாவை சுட்டுக் கொன்ற இந்தியர்.., Online -ல் துப்பாக்கி ஆர்டர்
அமெரிக்காவில் தாத்தா, பாட்டி, மாமாவை சுட்டுக் கொன்ற இந்தியரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 பேரை சுட்ட இந்தியர்
இந்திய மாநிலம், குஜராத்தை சேர்ந்தவர் ஓம் பிரம்பாத்(23). இவருடைய தாத்தா திலீப்குமார் பிரம்பாத்(72), பாட்டி பிந்து பிரம்பாத்(72), மாமா யஷ்குமார் பிரம்பாத்(38) ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஓம் பிரம்பாத் அமெரிக்காவில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். கடந்த 27 -ம் திகதி ஓம் பிரம்பாத் வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. பின்னர், காவல்துறைக்கு இந்த சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், 911 அவசர எண்ணை ஓம் பிரம்பாத் தான் அழைத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பார்த்த போது இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பில் திலீப்குமார் பிரம்பாத், பாட்டி பிந்து பிரம்பாத் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.
அவரது மகன் யஷ்குமார் பிரம்பாத் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதையடுத்து, மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கைது செய்த பொலிஸ்
இதனைத்தொடர்ந்து, ஓம் பிரம்பாத்திடம் துப்பாக்கியால் சுட்டது யார் என்று பொலிஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நானாக கூட இருக்கலாம் என்றவுடன் பொலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்பு, ஓம் பிரம்பாத்திடம் நடத்திய விசாரணையில், ஒன்லைன் மூலம் துப்பாக்கி வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், அவர் தாத்தா, பாட்டி, மாமாவை எதற்காக கொலை செய்தார் என்ற காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக, ஓம் பிரம்பாத்திடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |