உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்திய ஸ்டார்ட்அப்
Indian startup Digantara tracks spy satellites in space: உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா
லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள MOSAIC எனும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு, இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா (Digantara) உருவாக்கிய புதிய தொழில்நுட்பமாகும்.
இது வானில் இயங்கும் செயற்கைக்கோள்கள், விண்வெளி கழிவுகள் மற்றும் நட்சத்திரங்களை தானாகவே பிரித்து கண்காணிக்கும் திறன் கொண்டது.

MOSAIC அமைப்பு
இந்த அமைப்பு, செயற்கைக்கோள்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் பாதையை கணக்கிடுகிறது. இதன் மூலம், எந்த செயற்கைக்கோள் எப்போது இந்தியாவின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இது தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
முன்னதாக, போக்ரான் அணு பரிசோதனைகளின் போது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்களை தவிர்க்க இந்தியா மிகுந்த சிரமங்களை சந்தித்தது.
அந்த அனுபவம், “முதலில் எப்போது உளவு செயற்கைக்கோள் மேலே பறக்கிறது என்பதை அறிய வேண்டும்” என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தது.
MOSAIC அமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வானில் பறக்கும் பொருட்களை தானாகவே அடையாளம் காண்கிறது. ஒரு இரவில் 400-500 பொருட்களை கண்காணிக்க முடியும்.
India gets new eyes on orbit. 🇮🇳
— Digantara (@Digantarahq) August 15, 2026
Introducing MOSAIC, our AI-powered Wide Area Sensing Architecture, built to search, detect and track hundreds of objects simultaneously, turning observations into orbital intelligence.
Mobile. Autonomous. Built in India for the scale of modern… pic.twitter.com/pr6Fu2iIdj
இந்தியாவில் மட்டுமல்லாமல், நமீபியா, சிலி, நியூ மெக்சிகோ, ஹவாய் போன்ற இடங்களிலும் இந்த அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இதன் மூலம் உலகளாவிய அளவில் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை கண்காணிக்க இந்தியாவுக்கு தனித்துவமான திறன் கிடைக்கிறது.
மேலும், இந்த அமைப்பு “லேசர் டாஸ்லிங்” எனப்படும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்கிறது. இது உளவு செயற்கைக்கோள்களின் கமெரா அமைப்பை தற்காலிகமாக பாதித்து, அவை முக்கிய இடங்களை படம் பிடிப்பதைத் தடுக்க உதவும்.
இந்தியாவின் பாதுகாப்பு கணக்கீடுகள் நிலம், கடல், வானம், சைபர் வலைப்பின்னல்கள் மட்டுமல்லாமல், இப்போது விண்வெளியையும் உள்ளடக்கியுள்ளன.
டிகந்தரா உருவாக்கிய MOSAIC அமைப்பு, இந்தியாவிற்கு சுயாதீனமான விண்வெளி கண்காணிப்பு திறனை வழங்கி, உலகளாவிய தரவுகளின் மீது சார்ந்திருப்பதை குறைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |