வெளிநாடொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய இளைஞருக்கு நேர்ந்த துயரம்
இந்திய இளைஞர் ஒருவர் வியட்நாம் நாட்டில் கோர விபத்தொன்றில் பலியானார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்
வியட்நாம் நாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவரான அர்ஷித் (Arshid Ashrith, 21) என்பவர், மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
சாலையின் வளைவான பகுதியில் அதிவேகமாக பயணித்துள்ளார் அர்ஷித்.
அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வர, அதன் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக அர்ஷித் இடது புறம் திரும்ப, அவரது மோட்டார் சைக்கிள் வீடு ஒன்றின் சுவர் மீது பலமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் அந்தரத்தில் பல்டியடித்து சற்று தொலைவில் சென்று விழுந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் அர்ஷித் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்துள்ளார்.
Respect the road rules...
— Dr Srinubabu Gedela (@DrSrinubabu) June 5, 2025
An MBBS Student from Telangana met with an accident due to over speed ... Arshid Preetam who studies third year of MBBS in Vietnam . People need to be careful in driving especially in unknown terrains pic.twitter.com/nhXw8UPWCg
அர்ஷித் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெற்றோர் துணி வியாபாரம் செய்துவருகிறார்கள்.
மகனுடைய மரணச் செய்தி கேட்டு அர்ஷித் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |