ஹமாஸ் தாக்குதலின்போது இஸ்ரேல் குடும்பத்தை பாதுகாத்த இந்திய பெண்கள்: வெளியாகியுள்ள வீடியோ
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது, தாங்கள் வேலை செய்த வீட்டிலுள்ளவர்களை துணிச்சலுடன் பாதுகாத்த இந்திய பெண்கள் இருவரைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கேரளப் பெண் வெளியிட்டுள்ள வீடியோ
இம்மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் காசா எல்லையோரமாக அமைந்துள்ள வீடு ஒன்றில் இரண்டு இந்தியப் பெண்கள் வயதான பெண் ஒருவரை கவனித்துக்கொள்ளும் பணியில் இருந்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் சபிதா, அவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர். அவருடன் மீரா மோகனன் என்னும் பெண்ணும் அந்த வீட்டிலிருந்திருக்கிறார்.
भारतीय वीरांगनाएं ! ????
— Israel in India (@IsraelinIndia) October 17, 2023
मूलतः केरला की रहने वाली सबिता जी, जो अभी इजराइल में सेवारत हैं, बता रही हैं कि कैसे इन्होने और मीरा मोहन जी ने मिलकर इसरायली नागरिकों कि जान बचाई। हमास आतंकवादी हमले के दौरान इन वीरांगनाओं ने सेफ हाउस के दरवाजे को खुलने ही नहीं दिया क्योंकि आतंकवादी… pic.twitter.com/3vu9ba4q0d
7ஆம் திகதி காலை 6.30 மணியளவில் சைரன் ஒலித்ததாம். சைரன் ஒலித்ததும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வது அங்கு வழக்கமான ஒரு விடயமாம்.
ஆனால், அன்று சைரன் விடாமல் ஒலித்ததுடன், துப்பாக்கிச் சுடும் சத்தமும் கேட்க, அப்போதுதான் அந்த வீட்டிலுள்ள பெண் ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதலில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயலில் இறங்கிய துணிச்சல்காரப் பெண்கள்
உடனடியாக இந்த இரண்டு பெண்களும் உட்புறமாக கதவுகளைப் பூட்டிக்கொண்டு, யாரும் கதவைத் திறந்துவிடாதபடி பாதுகாப்பாக கதவின் அருகேயே நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கதவை உதைத்தும், துப்பாக்கியால் சுட்டும் திறக்க முயன்றும், சபிதாவும் மீராவும் கதவைத் திறக்கவிடாமல் பிடித்துகொண்டே நின்றிருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
Mathrubhumi English
மதியம் 1.00 மணியளவில் மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, அந்தக் குடும்பத்தின் தலைவர் சென்று பார்த்துவிட்டு, இஸ்ரேல் ராணுவம் தங்களைக் காப்பாற்றவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வீரப் பெண்ணுக்கு பாராட்டுக்கள்
அந்த வீடு முழுவதும் ஹமாஸ் தாக்குதலில் சேதமடைந்தாலும், தங்களுக்கு பணி வழங்கிய குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டார்கள் இந்த இந்தியப் பெண்கள்.
அன்று நடந்த சம்பவங்களை வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார் சபீதா.
Hindustan Times
அந்த வீடியோவை வெளியிட்ட சபிதாவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகின்றன. Israel in India என்னும் எக்ஸ் கணக்குக்கு சொந்தக்காரர்கள், சபிதாவை ’Indian superwoman’ என பாராட்டியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |