22 நாட்களில் 8 குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண்! உறுதியுடன் செய்து வரும் நெகிழ்ச்சி செயல்
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண் 22 நாட்களில் தனது 8 குடும்ப உறுப்பினர்களை கொரோனாவுக்கு இழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் வசித்து வருபவர் ஜுஹி கான் (48). இவர் இந்தியாவை சேர்ந்தவர். இந்தியாவில் வசிக்கும் ஜுஹி கானின் மாமனார் உள்ளிட்ட 8 குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் கடந்த 22 நாட்களில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதையடுத்து தனது சொந்த நாட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உதவ உள்ளூர் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ஜுஹி கான் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார். அதன்படி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற பெயரில் உதவிகளை செய்து வருகிறார்.
அதாவது பிரபல தொண்டு நிறுவனமான அல் பெர் சொசைட்டியுடன் இணைந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் நிதி வசூலித்து இந்தியாவுக்கு கொடுத்து வருகிறார் ஜுஹி கான்.
சேகரிக்கப்பட்ட நிதி இந்திய நகரங்கள் மற்றும் தொலைதூர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவைகளை ஒழுங்கமைக்கவும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் போன்ற பல விடயங்களுக்காக பயன்படுத்தப்படும்.
இது குறித்து அவர் கூறுகையில், என் கண்ணீரில் மிச்சமில்லை! ஏனெனில் என் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் 8 பேரை 22 நாட்களில் இழந்துள்ளேன்.
இதுபோன்ற தனிப்பட்ட இழப்பை நீங்கள் சந்திக்கும்போது, காயம் மிகவும் ஆழமானது. இந்தியாவில் மக்களின் வலியை என்னால் உணர முடிகிறது.
எனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள், நான் திட்டமிட்டுள்ள முன்முயற்சியுடன் முன்னேற வேண்டும் என்ற உந்துதலை மேலும் தீவிரப்படுத்தின.
இந்த ஆதரவு இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.
ஜுஹி கான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்திய மருத்துவமனை குழு ஆஸ்டர் டிஎம் அறக்கட்டளையுடன் இணைந்தும் பணியாற்றவுள்ளார் என தெரியவந்துள்ளது.