புலியுடன் செல்ஃபி எடுக்க முயற்சி - தாய்லாந்தில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்
தாய்லாந்தில், புலியுடன் செல்ஃபி எடுக்க இந்திய இளைஞர் எடுத்த முயற்சி ஆபத்தில் முடிந்துள்ளது.
புலியுடன் செல்ஃபி
சமூகவலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் ஆபத்தான சவாலான விடயங்களை செய்து, அதனை வீடியோ எடுத்து வருகின்றனர்.
அதே போல், தாய்லாந்தில் இந்திய இளைஞர் ஒருவர் செய்த முயற்சியால், அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு தாய்லாந்தின் ஃபூகெட் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பது வழக்கம்.
அதே போல், இந்திய இளைஞர் ஒருவர் அங்கிருந்த புலியுடன் செல்ஃபி எடுக்க விருப்பப்பட்டுள்ளார்.
இளைஞரை தாக்கிய புலி
இந்திய இளைஞர், புலியின் கழுத்தில் மாட்டப்பட்ட சங்கிலியை பிடித்தபடி அதன் அருகே நடந்து வருகிறார்.
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
— Sidharth Shukla (@sidhshuk) May 29, 2025
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.#Indians #tigers #thailand #AnimalAbuse pic.twitter.com/7Scx5eOSB4
அப்போது இந்திய இளைஞர் செல்ஃபி எடுப்பதற்காக புலியின் அருகே அமர, ஒரு குச்சியால் புலியின் மேலே தட்டி, புலியை அமருமாறு கட்டளையிடுகிறார் புலியின் பயிற்சியாளர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆத்திரமடைந்த புலி, இந்திய இளைஞரை ஆக்ரோஷமாக தாக்குகிறது. அதை எதிர்பாராத அந்த இளைஞர் பயத்தில் அலறுகிறார். பயிற்சியாளர் அந்த புலியை கட்டுப்படுத்துகிறார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |