அமெரிக்க உறவினரின் குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை: நீதிமன்றம் கூறும் காரணம்
உறவினரின் அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் கூறியது
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, மும்பையில் உள்ள தம்பதியினருக்கு அமெரிக்காவில் உறவினர்கள் இருக்கின்றனர். இந்த உறவினர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தையை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இந்தியா அழைத்து வந்து விட்டனர். இந்நிலையில், மும்பை தம்பதியினர் அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தையை தத்தெடுக்க அனுமதி வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் கூறிய தீர்ப்பில், "சிறார் நீதி மற்றும் தத்தெடுத்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், குழந்தையானது தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலிலோ அல்லது சட்ட சிக்கலிலோ இல்லை.
உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும் சரி வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் அனுமதி இல்லை. அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை.
இதற்காக மனுதாரர்கள் முதலில் அமெரிக்க சட்டவிதிமுறைகள்படி அந்நாட்டு குழந்தையை தத்தெடுக்கும் நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |