கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..நீர் மூழ்கி கப்பலுடாக வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனை! உலக செய்திகள்
நைஜீரியாவில் தொடர்ந்து தாக்குதல்களும் ஆள் கடத்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரான மெகலே திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷ்ய தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.