2 வாரத்தில் 114 டாக்டர்கள் பலி! ஆசியாவின் கோவிட் மையமாகும் இந்தோனேசியா
இந்தோனேசியாவில் கடந்த 2 வாரங்களில் 114 மருத்துவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தோனேசியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தற்போது ஆசியாவில் கோவிட் பெருந்தொற்றின் மையப்பகுதியாக இந்தோனேசியா மாறி இருக்கிறது.
இந்தோனேசியாவில் கிராமப் பகுதிகளே அதிகமாக உள்ளது. அங்கு போதுமான மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் நோயில் சிக்கியவர்கள் சிகிச்சை கிடைக்காமலேயே செத்து மடியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் 44,721 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்; 1,093 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகள் இல்லை. அதே நேரத்தில் அவர்களும் தொற்றில் சிக்கி பலியாகிறார்கள்.
இந்தோனேசியாவில் இதுவரை 545 டாக்டர்கள் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி உள்ளனர். இந்த ஜூலை மாதத்தின் முதல் 17 நாள்களில் மட்டும் இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பால் 115 மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா.