இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்த சோகம்
போட்டியில் தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர்கள் ஆடுகளத்தை ஆக்கிரமித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், இது கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கால்பந்து போட்டியில் கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்ததாகவும், 180 பேர் காயமடைந்ததாகவும் இந்தோனேசிய பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான ஆட்டம் முடிந்ததும், தோல்வியடைந்த அணியின் ஆதரவாளர்கள் வைத்தனத்தை ஆக்கிரமித்ததால், பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், இதனால் கூட்ட நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று கிழக்கு ஜாவா பொலிஸ் தலைவர் நிகோ அஃபின்டா செய்தியாளர்களிடம் கூறினார்.
Reuters
கிழக்கு ஜாவா பொலிஸ் தலைவர் நிகோ அஃபின்டா இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியதாவது: இந்த சம்பவத்தில், 129 பேர் இறந்தனர், அவர்களில் இருவர் பொலிஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் இறந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் இறந்தனர்.
கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சியில் நடந்த ஆட்டத்தில் பெர்செபயா சுரபயாவிடம் அரேமா 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டு ஜாவானீஸ் கிளப்புகளின் ரசிகர்களிடையே சண்டை ஏற்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
This is probably the worst tragedy in football history. It’s being reported around 127 dead, nearly 200 injured in a football stadium in Indonesia pic.twitter.com/ZP83QeU5rz
— Eric Njiru (@EricNjiiru) October 2, 2022
AFP/STR
இந்நிலையில், விசாரணை தொடங்கப்பட்டது என்று இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் (PSSI) தெரிவித்துள்ளது. மேலும், இந்தோனேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சர் ஜைனுடின் அமலி, இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தோனேசியாவில் நடந்த போட்டிகளில் பிரச்சனைகள் வெடித்துள்ளன, கிளப்புகளுக்கு இடையே ஒரு வலுவான போட்டி சில நேரங்களில் ஆதரவாளர்களிடையே வன்முறைக்கு வழிவகுத்தது.
CNN Indonesia
AFP/STR
AFP/STR
AFP/STR