இந்தோனேசியா கால்பந்து போட்டி கலவரத்தில் பலி எண்ணிக்கையில் குழப்பம்: ஆளுநர் எமில் டார்டக் புதிய விளக்கம்
கால்பந்து போட்டியின் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ல் இருந்து 125 ஆக குறைப்பு.
தவறுதலான இரட்டை எண்ணிக்கையால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ஆளுநர் விளக்கம்.
சனிக்கிழமை இரவு இந்தோனேசியாவின் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 125 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாகவும், இதற்கு முன்பு வெளியிடப்பட்ட எண்ணிக்கை தவறுதலான சேர்ப்பால் அதிகமாக அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் மலாங் நகரில் அரேமா எஃப்சி மற்றும் சுரபயா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற கால்பந்து போட்டியில் உள்ளூர் அணியான அரேமா எஃப்சி 3-2 என்ற என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
This is probably the worst tragedy in football history. It’s being reported around 127 dead, nearly 200 injured in a football stadium in Indonesia pic.twitter.com/ZP83QeU5rz
— Eric Njiru (@EricNjiiru) October 2, 2022
கடந்த 23 ஆண்டுகளாக தனது சொந்த கஞ்சுருஹான்(Kanjuruhan) மைதானத்தில் அரேமா அணி தோல்வியே சந்திக்காத நிலையில், தற்போதைய போட்டியில் அரேமா கால்பந்து அணியின் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது பொருட்களை தூக்கி வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 48,000 ரசிகர்களை உள்ளடக்கியிருந்த மைதானத்தில் சுமார் 3000 பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சி செய்தனர்.
இந்த முயற்சியின் போது இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீச தொடங்கினர்.
CNN INDONESIA
இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்ட நெரிசலில் 125 பேர், மிதியடியில் சிக்கி மற்றும் நெருக்கடியில் மூச்சு திணறி உயிரிழந்துள்ள இருப்பதாகவும் 180 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புகள் தொடர்பாக இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தகவலில் 174 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்து தவறுதலான இரட்டை எண்ணிக்கை என்றும், சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதால் சில பெயர்கள் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கிழக்கு ஜாவா துணை ஆளுநர் எமில் டார்டக் ஞாயிற்றுக்கிழமை மாலை மெட்ரோ டிவியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மையான பலி எண்ணிக்கை இதுவரை 125 ஆக உள்ளது என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த சோக சம்பவத்தின் விளைவாக இந்தோனேசிய கால்பந்து சங்கம் பிரீமியர் கால்பந்து லீக் லிகா 1 தொடரை காலவரையின்றி இடை நிறுத்தியுள்ளது.
மேலும் அரேமா அணி எஞ்சிய போட்டிகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
AFP/STR
கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் முதல் வெளிநாட்டு பயணம்: பிரதமர் லிஸ் ட்ரஸ் அழுத்தத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதா?
அதேபோல் கால்பந்து மைதானங்களில் கண்ணீர் புகைக்குண்டு வீசுவதற்கு ஃபிபா தடை விதித்துள்ள நிலையில் பொலிஸார் அவற்றை எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்த விசாராணையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.