தீவில் வெடித்த எரிமலை..சுனாமி எச்சரிக்கை விடுத்த இந்தோனேசியா
இந்தோனேசியாவின் தீவில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை ஆய்வு நிறுவனம்
வடக்கு Sulawesiயில் உள்ள ருவாங் தீவில் உள்ள 725 மீற்றர் உயரமான மவுண்ட் ருவாங் எரிமலை, செவ்வாய் இரவு முதல் குறைந்தது 5 முறை வெடித்தது.
மேலும், உமிழும் எரிமலை மற்றும் சாம்பலை வானத்தில் ஆயிரக்கணக்கான அடிகள் உமிழ்ந்துள்ளது என்று நாட்டின் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலில் சுனாமியைத் தூண்டும் அச்சம் எழுந்துள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராமவாசிகளை வெளியேறுமாறு
எரிமலை பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிராமவாசிகளை வெளியேறுமாறு இந்தோனேசிய அதிகாரிகள் புதன்கிழமை உத்தரவிட்டனர்.
எரிமலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மாக்மாவில் வாயு உருவாக்கம் காரணமாக Stratovolcanoes அடிக்கடி வெடிக்கும் வெடிப்புகளை உருவாக்குகிறது.
2018ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததால் உண்டான சுனாமியைத் தூண்டியதில், ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளின் கரையோரங்களைத் தாக்கி 400க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |