ஆழ்கடலில் 57 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பல்
இந்தோனேசியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலை காணவில்லை என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
பாலி தீவுக்கு அருகில் கப்பல் மாயமானதாகவும், அதில் 53 பேர் இருந்ததாகவும் இந்தோனேசிய இராணுவம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இந்தோனேசிய இராணுவத்திற்கு சொந்தமான கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
அப்போது நீர்மூழ்கி கப்பலிருந்து திட்டமிடப்பட்ட ரிப்போர்டிங் அழைப்பு விடுக்கவில்லை என இராணுவ தளபதி Hadi Tjahjanto கூறினார்.
பாலிக்கு வடக்கே சுமார் 60 மைல் நீரில் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போயுள்ளதாக நம்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் தேடுவதற்காக இந்தோனேசிய போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாகவும், நீர்மூழ்கிக் கப்பலை மீட்கும் கப்பல்களை வைத்திருக்கும் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவிடம் உதவி கேட்டுள்ளதாகவும்Tjahjanto தெரிவித்துள்ளார்.