மூன்று மாதத்தில் 50 மில்லியன் மக்கள்... பதறவைக்கும் புதிய தகவல்: தத்தளிக்கும் முதன்மை நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி முடிய, மொத்தம் 100 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் அந்த எண்ணிக்கை அதிரவைக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை உலக நாடுகளில் மொத்தம் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு இலக்கானதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி 26 முடிய, மொத்தம் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 50 மில்லியன் அதிகரிகரித்துள்ளதாக பதறவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை உலகமெங்கும் 3.1 மில்லியன் மக்கள் கொரோனா தொடர்பாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், உலகளவில் நோய்த்தொற்றுக்கு இலக்கானவர் மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் என இரண்டிலும் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்படாத கணக்குகளும் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது இவ்வாறிருக்க, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை உலகமெங்கும் 149.2 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
3.1 மில்லியன் மக்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும், வியாழக்கிழமை மாலை நேரம் வரையில் உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகளாவிய தொற்று விகிதம் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1.3 பில்லியன் குடிமக்கள் கொண்ட இந்தியாவில் சமீப நாட்களாக நாளுக்கு 300.000 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி உலகெங்கும் தொற்று அதிகரிப்புக்கு 38% காரணம் இந்தியாவின் தற்போதை நிலையே என உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய வார அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.