அதிகாலையில் நடந்த துயரம்... பல பேர் உயிரைப்பறித்த பேருந்து பயணம்
துருக்கியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்தால் 15 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
துருக்கியின் பாலிகேசிர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து முழுமையாக சேதமடைந்தது. விபத்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குறித்த விபத்தில் 15 பேர் பலியாகினர் எனவும் 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிகேசிர் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.