இலங்கை அணிக்கு பெரிய இழப்பு... டி20 உலகக் கோப்பையில் நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கில்
ஓமானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது காயமடைந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஓமானுக்கு சென்றுள்ள இலங்கை அணி, ஓமானுடன் 2 டி20 போட்டிகள் தொடரில் விளையாடுகிறது.
நேற்று AL Amerat மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
போட்டியில் 2 வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், காயமடைந்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
நுவான் பிரதீப் காயமடைந்ததை உறுதிப்படுத்திய இலங்கை கிரிக்கெட், நுவானின் நிலையை மதிப்பிடுவதாகவும் அதன் அடிப்படையில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியது.
இந்நிலையில், காயமநை்த நுவானுக்கு 4 வாரங்கள் ஓய்வு அளிக்கப்படலாம், அதாவது அவர் உலகக் கோப்பையில் வெளியாட முடியாத நிலை நேரிடும் என்று விளையாட்டு பத்திரிக்கையாளர் Rex Clementines கூறினார்.
வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்ததால் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த இலங்கை தொடக்க வீரர் குசல் ஜனித் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார்.
குசல் ஓமானுக்கு எதிராக 2வது டி20 விளையாட்டை விளையாடுவாரா என்று தேர்வாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் வங்க தேசம் மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் மீண்டும் விளையாட வைக்க தேர்வாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.