உக்ரைனில் கொடூரமாக கொல்லப்படும் அப்பாவிகள்: நக்கலாக சிரிக்கும் ரஷ்ய இளம்பெண்
உக்ரைனிய மக்களுக்கும் ரஷ்யர்களுக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் உள்ளன.
பலர் கொடூரமாக கொல்லப்படுவதைக் குறித்துக்கூட இரு நாட்டவர்களும் வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள்.
உக்ரைனில் அப்பாவிகள் பலர் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் குறித்துக் கேள்வி எழுப்பினால், நக்கலாக சிரிக்கிறார் ரஷ்ய இளம்பெண் ஒருவர்.
ரஷ்யர்களில் பெரும்பாலானோரின் மன நிலை அப்படித்தான் இருக்கிறது.
அதே கேள்விக்கு வெம்பிக் கண்ணீர் வடிக்கிறார் தன்னவர்கள் பலரை யுத்தத்தில் இழந்த உக்ரைன் பெண் ஒருவர்.
ரஷ்யர்களுக்கும் உக்ரைனியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாகக் காட்டும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
The contrast between Ukrainians and Russians. This young Russian lady laughs and giggles while talking about the people "tragically dying" in Ukraine. pic.twitter.com/SXirzQh7s2
— Dmitri (@wartranslated) August 26, 2022
ரஷ்யப் போர் துவங்கி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உங்கள் வாழ்வில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என ரஷ்யப் பெண் ஒருவரிடம் கேட்டால், இல்லை என சிரிக்கிறார் அவர்.
அதற்காக கவலைப்படுகிறீர்களா என்று கேட்டால், அப்போதும் சிரித்துக்கொண்டே, இல்லை என்கிறார் அந்த இளம்பெண்.
அதே கேள்வியை ஒரு உக்ரைனியப் பெண்ணிடம் கேட்கும்போது, கண்ணீர் கொப்புளிக்க, முகம் சிவக்க, எங்கள் வீட்டையும், எங்கள் சகோதரையும் இழந்துவிட்டோம், ரஷ்யர்களால், என்கிறார் அவர்.
அந்தப் பெண்ணின் சகோதரர் மரியூபோலை பாதுகாக்கும் முயற்சியில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டாராம்.
மீண்டும் அந்த ரஷ்ய இளம்பெண்ணிடம், நீங்கள் செய்திகள் பார்ப்பதில்லையா என்று கேட்டால், நான் செய்திகளைப் பார்க்கிறேன், ஏனென்றால், நான் ஒரு தூதுவராவதற்காக படித்துக்கொண்டிருக்கிறேன், அதனால் செய்திகளைப் பார்க்கிறேன் என்கிறார்.
செய்திகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் கவலையை ஏற்படுத்தும் விடயங்கள்தான், உயிரிழப்பவர்களுக்காக வருந்துகிறேன் என்று கூறும் அந்த இளம்பெண், அப்போதும் சிரிக்கிறார். அவர் முகத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்களே என்ற எண்ணத்தின் தாக்கம் கொஞ்சமும் இல்லை.
ஆனாலும், எல்லாம் நன்மைக்குத்தான் என்கிறார் அவர். இதில் என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டால், எங்கள் நாட்டுக்கும், அதாவது ரஷ்ய நாட்டுக்கும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கும் நல்லது என்கிறார் அவர்.
தாய், மகள், சகோதரி என்னும் உயர்ந்த உறவுகளாக பார்க்கப்படும் பெண்களுக்குக் கூட ரஷ்யாவில் பெண்மை என்னும் உணர்வு இல்லையோ எனத் தோன்றுகிறது அந்த இளம்பெண் பேசும் விதத்தைப் பார்த்தால்.
ஆமாம், தன் கணவரிடம், நீ எத்தனை உக்ரைன் பெண்களை வேண்டுமானாலும் வன்புணர்ந்துகொள், என்னிடம் மட்டும் அதைக்குறித்து பேசாதே என்று கூறிய ரஷ்ய மனைவியையும், நீ உக்ரைனியர்களை சித்திரவதை செய்ததை ரசித்து செய்தாயா என தன் மகனிடம் கேட்ட ஒரு ரஷ்யத் தாயையும் குறித்துதான் நாம் கேள்விப்பட்டோமே!