எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் INS Arnala இந்திய கடற்படையில் சேர்ப்பு
எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் வகையிலான INS Arnala போர்க்கப்பல் இந்திய கடற்படையில் நேற்று சேர்க்கப்பட்டது.
INS Arnala போர்க்கப்பல் இணைப்பு
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ், போர்க்கப்பல் ஒன்றை தயாரித்து கடந்த மே மாதம் 8-ம் திகதி இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது.
இந்த போர்க்கப்பலானது, எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டது.
இந்த கப்பலுக்கு மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் அர்னாலா என்ற வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின் பெயர் சூட்டப்பட்டது.
77.6 மீட்டர் நீளம், 320 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் அர்னாலா, கடல் டீசல் என்ஜின்களால் இயக்கப்படும் வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் கப்பலில் அதிநவீன சென்சார்கள், போர் மேலாண்மை அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள் மற்றும் ASW ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கண்ணிவெடிகள் பதித்தல் மற்றும் ஒருங்கிணைந்த வான்-கடல் செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.
போர்க்கப்பலைத் தயாரித்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) படி, INS அர்னாலா கடலோர நீரில் முழு அளவிலான துணை மேற்பரப்பு கண்காணிப்பு மற்றும் தேடல் மற்றும் தாக்குதலை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
மேலும் விமானங்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். இது இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |