காதுக்குள் கேட்ட விசித்திர சத்தம்! மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
நியூசிலாந்தில் ஒருவரின் காதில் உயிருடன் பூச்சி ஒன்று வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டிலுள்ள Auckland என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Zane Wedding. இவருக்கு 3 நாட்களாக காதில் எதோ ஒன்று நெளிவது போன்ற உணர்வு இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்காக காது நிபுணரிடம் சென்றுள்ளார். முதலில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு காதில் கட்டி எதுவும் உருவாகியிருக்கலாம் என நினைத்துள்ளார்.
ஆனால் காதை சோதனை செய்து பார்த்த பிறகு மருத்துவருக்கே அதிர்ச்சி காத்திருந்தது. காதுக்குள் கருப்பான் பூச்சி போல ஒன்று நெளிந்து போவதைக் கண்டுள்ளார். அதன் பிறகு கருவி மூலம் மெல்ல மெல்ல பூச்சினை வெளியேற்றியுள்ளனர்.
இது குறித்து Zane Wedding கூறியதாவது, கரப்பான் பூச்சியை காதிற்குள் இருந்து எடுக்கும் போது எனது செவி முழுவதும் அதிர்வதைப் போலவே நான் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.