இனி இன்ஸ்டாகிராமில் நீங்கள் பேசுவதை மெட்டா படிக்கும் - நீக்கப்படும் E2EE அம்சம்
இன்ஸ்டாகிராமில் E2EE அம்சத்தை நீக்க உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் நீக்கப்படும் E2EE
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
முதலில் புகைப்படங்களை பதிவேற்றும் தளமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த செயலியில், அதன் பின்னர் வீடியோ, ரீல்ஸ், DM உரையாடல்கள், ஆடியோ, வீடியோ கால் என பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட (E2EE) செய்தியிடல் அம்சத்தை கடந்த டிசம்பர் 2023 மெட்டா அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம், அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே அரட்டையின் உள்ளடக்கங்களைப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்ததது. மெட்டாவால் கூட இதை படிக்க முடியாது.
தற்போது வரும் மே 8 ஆம் திகதி முதல் இந்த அம்சத்தை நீக்க உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. இதன் மூலம், பயனர்களின் DM ல் உரையாடுவதை மெட்டா நிறுவனம் படிக்க முடியும்.
பயனர்கள் மே 8க்கு முன்னர் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் உரையாடல்களை Export செய்து கொள்ளலாம்.

Settings and Activity யில் உள்ள Accounts Centre என்பதில் Information and Permissions என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அங்கு Export Your Information என்பதில் Create Export என்பதை தேர்வு செய்து திகதி வாரியாக தேவையான உரையாடல்களை Export செய்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை கண்காணிக்க இந்த முடிவை மெட்டா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாகவே பல்வேறு நாடுகளும் இந்த E2EE அம்சத்தை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்த உரையாடல்களை பயன்படுத்தி, அதன் மூலம் AIயை மேம்படுத்த முயற்சிப்பதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதன் மூலம், உரையாடல்களுக்கு ஏற்ப உங்களுக்கு விளம்பரங்கள் தோன்றும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |