மே-2 ஆம் திகதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்! வாக்களித்த பின்னர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேட்டி
மே-2 ஆம் திகதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்னர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவின் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சற்றுமுன்னர் வாக்களித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மே-2 ஆம் திகதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் . தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி என்று சொல்லமுடியாது திருப்தி இல்லை என்றும் சொல்ல முடியாது.
ஆளுங்கட்சிக்கு எதிரான அலை தமிழகத்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.