அந்த பாடல்கள் கேட்டால் 10 ஆண்டுகள் சிறை உறுதி: இளைஞர்களுக்கு கிம் ஜோங் உன் எச்சரிக்கை
தென் கொரியாவில் பிரபலமாக உள்ள பாப் இசையை விரும்பிக் கேட்கவோ, நாடகங்களை கண்டுகளிக்கவோ செய்யும் வடகொரியர்களுக்கு கடுமையான தண்டனை உறுதி என கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரிய பாப் இசை, தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை உலகமெங்கும் மக்களால் பெரிதும் கொண்டாடப்படுபவை.
வட கொரியாவிலும் அதன் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. முதலில் கேசட்டுகள் மற்றும் குறுத்தகடுகளில் எல்லை தாண்டி வந்த தென் கொரிய கலாச்சாரம், தற்போது சீனா வாயிலாக அதன் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையிலேயே வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தென் கொரிய கலாச்சாரம் சீரழிவு எனவும், அது புற்றுநோய்க்கு ஒப்பானது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது வடகொரியாவில் அழிவுக்கு கொண்டு செல்லும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய கலாச்சாரத்தை பின்பற்ற நினைக்கும் இளைஞர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் எனவும், 15 ஆண்டுகள் வரை முகாம்களில் அடைத்து சித்திரவதைக்கு இரையாக்கப்படுவார்கள் எனவும் எசாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் முதல் அமுலில் இருந்துவரும் புதிய சட்டத்தின் படி, தென் கொரிய பாடல்களை விரும்பி கேட்பவர்கள், அங்குள்ள நாடங்களை கண்டுகளிப்பவர்கள், தென் கொரிய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களுக்கு 15 ஆண்டுகள் தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் 5 வருடங்கள் என இருந்த தண்டனைக் காலம், திருத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கேசட்டுகள், குறுத்தகடுகள் உள்ளிட்ட தென் கொரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எல்லை தாண்டி கடத்திவருபவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.