தோனியாக நினைத்தேன்.. ஏமாற்றமே மிச்சம்! இளம் இந்திய பேட்ஸ்மேன் குறித்து இன்சமாம் கருத்து
இந்திய பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அழுத்தத்தில் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
போட்டிக்கு பின் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, ரிஷப் பந்த் மீது எனக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் செயல்பட்ட விதம், நான் அவரை மிகவும் உயர்வாக மதிப்பிட்டேன்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் ஆஸ்திரேலியாவிலும், பின்னர் இங்கிலாந்துக்கு எதிராகவும் விளையாடியதை மற்றும் விளையாடிய சூழ்நிலைகளை நான் பார்த்தேன்.
தோனியைப் போல டாப் ஆர்டரால் முடியாத போது, மிடில் ஆர்டரில் களமிறங்கி அதை ஈடுகட்டுவார் என்று நினைத்தேன். பந்த் அப்படிப்பட்ட வீரர் என்று உணர்ந்தேன்.
ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாடவில்லை. அவர் அழுத்தத்தில் இருப்பது போல் தெரிகிறது.
இதற்கு முன்பும், அவர் அழுத்தத்தில் இருந்துள்ளார், ஆனால் அவர் எப்பொழுதும் அதிலிருந்து வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சமீபகாலமாக அவர் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாடுவதில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்த் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். பந்த், விளையாடுவதை பார்ப்பது விருந்தாக இருக்கும்.
அதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், அவர் தனது ஆட்டத்தை மேம்பத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.