துபாய் மைதானத்தில் மோதிரம் நீட்டி காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்! ஒகே சொன்ன காதலி.. வைரலாகும் வீடியோ
துபாய் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், போட்டியின்போது தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார்.
அவரும் புன்னகையுடன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி் உள்பட அருகிலிருந்த அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதன் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வின் மூலம் ரசிகர்களிடத்தில் தனது நிச்சயதார்த்த நிகழ்வை உறுதி செய்தார் தீபக் சாஹர்.
சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சஹாரும் இதை சிறப்புமிக்க தருணம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.