2022 ஐபிஎல் தொடர் எங்கே நடக்கும்.. ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? கசிந்த தகவல்
2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ-யில் உள்ள முக்கிய வட்டாரத்திடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.
2022 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் கொரோனா காரணமாக இரண்டு கட்டமாக இந்தியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடந்தது.
இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ-யில் உள்ள முக்கிய வட்டாரம் அளித்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தால், 2022 ஐபிஎல் தொடரை இந்தியாவில் பிசிசிஐ நடத்தும்.
2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் மற்றும் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம், கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மற்றும் மும்பையில் உள்ள DY Patil மைதானத்தில் போட்டிகள் நடைபெறும், தேவைப்பட்டால் புனேவில் போட்டி நடத்தப்படலாம் என பிசிசிஐ-யில் உள்ள முக்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.