IPL 2024: துடுப்பெடுத்தாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் அணி வெற்றிப்பெறுமா?
2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இன்றைய போட்டிகள்
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 2 ஆவது போட்டி பஞ்சாப்ஸ் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகியவற்றுக்கிடையில் போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப்ஸ் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.
அத்துடன் இன்றைய நாளுக்கான மற்றுமொரு போட்டியில், சன்றைசஸ் ஹைட்ராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |