திரும்ப வந்திட்டேன்... 8 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சி செய்தி சொன்ன பிரபல வீரர்
இந்த ஆண்டிற்கான IPL வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் பெயர் 8 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்றுள்ளது.
IPLலின், 15வது சீசன் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் 12 மற்றும் 13 திகதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெற உள்ளது.
மொத்தம் 589 பிளேயர்கள் கொண்ட பெயர் பட்டியலை IPL நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. இதில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சாந்த் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீ சாந்த், சூதாட்டத்தில் ஈடுபட்டதிற்காக அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு IPL போட்டிகளில் விளையாடுவதற்காக விண்ணப்பித்து இருந்த ஸ்ரீ சாந்தின் பெயரை கடைசி நேரத்தில் BCCL நிர்வாகம் நீக்கியது.
அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிய இவர். இந்த ஆண்டுக்கான IPL ஏலத்திற்கும் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவர் பெயரும் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு வீரர்களின் பட்டியலில் ஸ்ரீ சாந்த் இடம்பெற்றதை தொடர்ந்து, அவர் தனது ட்விட்டரில் அனைவரையும் தான் நேசிப்பதாகவும், அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.
Love u all..can’t thank u all enough..lots of gratitude ❤️❤️❤️❤️❤️Thnks a lot..#grateful and alwys will be grateful to each and every try one of u..plss do keep me in ur prayers for final auction too..”om Nama Shivaya..” pic.twitter.com/XAyBGx9IVU
— Sreesanth (@sreesanth36) February 1, 2022