ஐ.பி.எல்-ல இப்போ ரத்து செய்யமாட்டாங்க? நேரம் பார்த்து பழி வாங்கும் மைக்கல் வாகன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரான மைக்கல் வாகன் பிச்சிஐ-ஐ சீண்டும் வகையில் டுவிட் செய்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக இடையில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின் ஒத்தி வைக்கப்பட்ட அந்த ஐபிஎல் தொடர் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானதால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர், விஜயகுமார் (மேலாளர்), ஷாம் சுந்தர், அஞ்சனா வன்னன் (மருத்துவர்), துஷர் கெட்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), பி கணேசன் (நெட் பவுலர்) ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இன்றைய போட்டி நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவில்லை.
Let’s see if the IPL gets cancelled like the last Test !!!!! I guarantee it won’t be … #OnOn https://t.co/HV7V70i69x
— Michael Vaughan (@MichaelVaughan) September 22, 2021
இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இங்கிலாந்தில் நடைபெற்று வந்த இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி, இது போன்ற கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், அது போன்று ஐபிஎல் போட்டி ரத்தாகாது என்று நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற முன்னிலையுடன், 5-வது போட்டி நடைபெறுவதற்கு முன்பே கொரோனா அச்சுறுத்தல்(ரவிசாஸ்திரி மற்றும் சிலருக்கு கொரோனா உறுதியானதால்) காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர்.
இதனால் அதை மனதில் வைத்துக் கொண்டு நேரம் பார்த்து மைக்கல் வாகன் பிசிசிஐ-ஐ சீண்டுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுவருகின்றனர்.