ஐபிஎல் கிரிக்கெட்... அஸ்வின் தலைமையில் டெல்லி அணி?
ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடாத சூழலில் டெல்லி அணிக்கு கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் அணித் தலைவராக உள்ளார்.
இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அனுபவ வீரர்களான அஸ்வின், ரகானே, சுமித் ஆகியோரின் ஒருவர் அணித் தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது..