ஐபிஎல் தொடர்! ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி... போட்டிகள் ரத்தாகுமா? முக்கிய தகவல்
ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதவுள்ள நிலையில் ஹைதராபாத் அணி வீரரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்2021 இந்தியாவில் நடந்து வந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ஐக்கிய அரபு நாடுகளில் மீதமுள்ள 31 போட்டிகள் கடந்த 19ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
T Natarajan has tested COVID positive.
— CricTracker (@Cricketracker) September 22, 2021
His 6 close contacts are listed below
1. Vijay Shankar
2. Vijay Kumar, Team Manager
3. Shyam Sundar, Physio
4. Anjana Vannan, Doctor
5. Tushar Khedkar, Logistics Manager
6. P Ganesan, Net Bowler#DCvSRH match to go ahead as per schedule.
இந்த நிலையில் ஹைதராபாத் வீரரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் வெளியாகியுள்ளது, அதனை தொடர்ந்து தன்னை தானே அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
நடராஜனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விஜய் சங்கர், விஜயகுமார் (மேலாளர்), ஷாம் சுந்தர், அஞ்சனா வன்னன் (மருத்துவர்), துஷர் கெட்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), பி கணேசன் (நெட் பவுலர்) ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அனைவருக்கும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்துள்ளது, இதையடுத்து இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
IPL 2021: Natarajan tests COVID-19 positive, SRH-DC game on
— ANI Digital (@ani_digital) September 22, 2021
Read @ANI Story | https://t.co/vmnIDKYVWW#IPL2021 #IPL pic.twitter.com/Kx82Da2U3K